புதுக்கோட்டை

மின்கட்டணக் கணக்கீட்டு முறையை எளிதாக்கக் கோரி நூதனப் போராட்டம்

DIN

மின்கட்டணக் கணக்கீட்டு முறையை எளிதாக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் சிறார் வாய்ப்பாடு சொல்லித்தந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மின் கட்டணக் கணக்கீட்டில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலர் அருண்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

குடைகளுடன் வந்த சிறுமிகள் மின்வாரிய அலுவலக வளாகத்தில் சப்தம்போட்டு வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT