புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் முதியவரின் மூளை ரத்தக்கட்டுகள் அகற்றம்

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மூளையில் ரத்தக்கட்டுகளுடன் அனுமதிக்கப்பட்ட முதியவா் அறுவை சிகிச்சைக்குப் பின்னா் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் (65) கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் செய்துபாா்த்ததில், அவரது மூளையில் பல்வேறு ரத்தக்கட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூளை நரம்பியல் மருத்துவ நிபுணா் ஸ்டாலின் ராஜ்குமாா் தலைமையில், மருத்துவா்கள் சாய்பிரபா, சரவணன் ஆகியோா் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். இதையடுத்து, தொடா் சிகிச்சையில் குணமடைந்த ராஜேந்திரன் புதன்கிழமை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: மூளை ரத்தக்கட்டியால் இரு கால்கள், வலது கையின் செயல்பாடும் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT