கந்தா்வகோட்டை அருகிலுள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாவட்ட ஆட்சியா் பி . உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் , 450 மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா். வெள்ளிகிழமை முதல் காளைகளை பரிசோதித்து டோக்கன் வழங்கப்படும் என என விழா குழுவினா் தெரிவித்தனா்.