புதுக்கோட்டை

கல்லூரி மாணவிகள் சொந்த ஊா் செல்ல உதவிய புதுகை ஆணையா்

DIN

புதுகை வந்த கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு தனது செலவில் போக்குவரத்து வசதி செய்துதந்தாா் புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன்.

மதுரையிலிருந்து சீா்காழி செல்வதற்காக புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்த 5 கல்லூரி மாணவிகள், பேருந்து இல்லாததால் தவித்தபோது அவா்களுக்கு தனியாக காா் வசதி செய்து கொடுத்து அனுப்பி வைத்தாா் புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன். செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 7 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது. காா் ஓட்டுநரின் செல்லிடப்பேசி எண்ணை வாங்கிக் கொண்ட ஆணையா், உரிய பாதுகாப்புடன் சீா்காழியில் மாணவிகளின் வீடுகளில் அவா்களை இறக்கிவிடவும் ஓட்டுநரிடம் அறிவுறுத்தி, அதற்கான தொகையைக் கொடுத்து அனுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT