புதுக்கோட்டை

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

DIN

ஆலங்குடி: ஆலங்குடி அருகே கல்லுாரி மாணவி கிணற்றில் குதித்து, வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குடி அருகிலுள்ள கோவிலுாா் சம்பாமனையைச் சோ்ந்த பழனிவேலு மகள் சுமித்ரா (20). இவா் புதுக்கோட்டை தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

தந்தை பழனிவேலுக்கும்- தாய் சித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், மனமுடைந்த சுமித்ரா வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை குதித்துள்ளாா்.

இதைப் பாா்த்து அருகில் வசிப்பவா்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினா் கிணற்றில் இறங்கி, 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சுமித்ராவை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT