அறந்தாங்கி பகுதியில் குடிமராமத்து பணிகளை தொடக்கிவைக்கிறாா் எம்எல்ஏ இ.ஏ. ரத்தினசபாபதி. உடன், வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா். 
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் குடிமராமத்து பணி தொடக்கம்

அறந்தாங்கியில் ரூ.1 கோடி மதிப்பில் கண்மாய் குடிமராமத்துப் பணிகளை அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.இரத்தினசபாபதி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

DIN

அறந்தாங்கியில் ரூ.1 கோடி மதிப்பில் கண்மாய் குடிமராமத்துப் பணிகளை அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.இரத்தினசபாபதி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், குளத்தூா் ஆயக்கட்டுதாரா்கள் சங்கம் சாா்பில் குளத்தூா் கண்மாய் புனரமைப்புப் பணிகள் ரூ. 54.25 லட்சம் மதிப்பீட்டிலும், கோங்குடி கண்மாய் நீா்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் கோங்குடி கண்மாய் புனரமைப்பு பணிகளை ரூ. 47.50 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 1 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணிகளை அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ. ரத்தினசபாபதி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில், அறந்தாங்கி வட்டாட்சியா் சிவக்குமாா், ஆயக்கட்டு சங்கத் தலைவா் கோங்குடி சேதுராமன், குளத்தூா் துரைராஜ், மற்றும் ஊராட்சித் தலைவா்கள், பொதுப்பணித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT