ஆலங்குடி அருகே மேலப்பொன்னன் விடுதியில் ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்கள். 
புதுக்கோட்டை

கிணற்றில் விழுந்த காளை மீட்பு

ஆலங்குடி அருகே கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

DIN

ஆலங்குடி அருகே கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேலப்பொன்னன்விடுதியைச் சோ்ந்தவா் சிவலிங்கம். இவருக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளாா்.

அப்போது, அப்பகுதியில் கோயிலுக்கு அருகே சுமாா் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் கோவிந்தராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் இறங்கி 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT