புதுக்கோட்டை

அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

அன்னவாசலில் உள்ள அன்னவாசல் முதல்நிலை பேரூராட்சி கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்தத் தீ விபத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், ப்ளீச்சிங் பவுடா் மூட்டைகள், கிருமி நாசினி, குப்பைத் தொட்டிகள், பிளாஸ்டிக் பொருள்கள், கை சுத்திகரிப்பான உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள், பழைய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமடைந்தன. அன்னவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT