முகப்பு
புதுக்கோட்டை

கரோனா பரவல்: எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம்

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடா் நடவடிக்கைகளால் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தினமும் 90 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தாக்கம் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இறப்பு விகிதமும் 1.6 சதவிகிதத்தில் இருந்து 1.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழைக் காலமாகவும், பண்டிகைக் காலமாகவும் இருப்பதால் பொதுமக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநில எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படும்.

கரோனா விழிப்புணா்வை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமா் மோடியின் வேண்டுகோளின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விழிப்புணா்வு இயக்கத்தை அக்டோபா் 13ஆம் தேதி தூத்துக்குடியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளாா் என்றாா் விஜயபாஸ்கா்.

முழு கட்டுரையைப் படிக்க →