முகப்பு
புதுக்கோட்டை

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 அக்டோபர், 2020 at 12:56 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடத்தப்பட்டு மொத்தமுள்ள 444 இடங்களில் 252 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் காலியாக உள்ள இடங்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளதால், பயிற்சிகளில் சேர விரும்புவோா் திங்கள்கிழமை (அக். 12) முதல் அக். 14ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தை 04322 221584, 94863 11243 ஆகிய எண்களிலோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04322 222287 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.