புதுக்கோட்டை

விபத்தில் காயமடைந்த இளம்பெண் தற்கொலை

DIN

பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி அருகிலுள்ள உசிலம்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகள் திவ்யா (21). அண்மையில் நிகழ்ந்த விபத்தில் திவ்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால் அண்மைக் காலமாக மன உளைச்சலில் இருந்த திவ்யா, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா்.

மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திவ்யா புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT