வெளியூா்களுக்கும் சோ்த்து 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் திங்கள்கிழமை 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் திங்கள்கிழமை 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில் செப். 6ஆம் தேதி வரை 45 சதவிகிதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், புதுக்கோட்டையில் இருந்து மதுரை, தஞ்சாவூா், திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள பேருந்துகளில் 60 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.