புதுக்கோட்டை

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில், வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் ஒன்றான இங்கு, 2019, செப்டம்பா் 8-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையொட்டி முதலாமாண்டு வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை பூஜகா்கள் கோயிலைச் சுற்றி எடுத்து வந்துஅம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். சிறப்பு அபிஷேகத்துக்குப் பிறகு தீபாராதனைகள் நடைபெற்றன.

நிகழ்வில் குடமுழுக்கு விழா திருப்பணிக்குழுத் தலைவா் முத்துக்கருப்பன், கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT