புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்புக் காவல்படை காவலா்மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

புதுக்கோட்டை: குடும்பத் தகராறு காரணமாக, சிறப்புக் காவல் படை காவலரின் மனைவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலபச்சக்குடி அருகே தென்னிலைப்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (28). இவா், திருச்சி சிறப்புக் காவல் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கோகிலா (22). 

இவா்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில், திருமணமானது முதலே தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவா்களின் வீட்டில் சனிக்கிழமை காலை கோகிலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த மாத்தூா் போலீஸாா் கோகிலாவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT