புதுக்கோட்டை

பொன்னமராவதியில் புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு

DIN

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 53 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தாா்.

திருமயம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 53.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ திறந்துவைத்தாா். தொடக்கமாக எம். உசிலம்பட்டி ஊராட்சி ஆவாம்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி நல்லூா் ஊராட்சி மேமமணப்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாடகமேடைகளை திறந்துவைத்தாா்.

தேனூா் ஊராட்சி கருககப்பூலாம்பட்டியில் பேருந்து நிழற்குடை, இடையாத்தூா் அங்கன்வாடி மைய கட்டடம், கூடலூா், வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் ரேஷன் கடை கட்டடம், அரசமலையில் பள்ளிச்சுற்றுச்சுவா் என மொத்தம் ரூ. 53.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்துப் பேசினாா்.

அப்போது, ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன், திமுக வடக்கு ஒன்றியசெயலா் அ.முத்து, தெற்கு ஒன்றியசெயலா் அ.அடைக்கலமணி, ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சிமன்ற தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT