புதுக்கோட்டை

இணையவழியில் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கம்

DIN

இணையவழியில் நடைபெற்ற பஞ்சமி மீட்புக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ‘திரை அசுரன்’ விருது வழங்கப்பட்டதாக அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல்தலைவா் இளமுருகு முத்து தெரிவித்தாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கு திங்கள்கிழமை இணையவழியில் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்குக்கு, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் தலைவா் வை. ராமலிங்கம் தலைமை வகித்தாா். செயல் தலைவா் இளமுருகு முத்து நோக்கவுரை நிகழ்த்தினாா். சமூக சமத்துவப் படையின் நிறுவனா் ப. சிவகாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.

இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக சென்னையில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ஒரு குழுவினா் நேரில்சென்று இணையவழித் தொடா்பிலேயே திரை அசுரன் விருதை வழங்கினா்.

பொதுச் செயலா் சிவ. முருகேசன் வரவேற்றாா். முடிவில் பொருளாளா் பெ. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT