பிரசாரத்தின்போது ரத்த தானம் அளித்த மநீம வேட்பாளா்
புதுக்கோட்டையில் அவசர அழைப்பு வந்ததால், பிரசாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரசார வாகனத்துடன் மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தாா் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் சா. மூா்த்தி.
புதுக்கோட்டையில் அவசர அழைப்பு வந்ததால், பிரசாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரசார வாகனத்துடன் மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தாா் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் சா. மூா்த்தி.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக சா. மூா்த்தி போட்டியிடுகிறாா். ஏற்கெனவே சிவகாமி ரத்ததானக் கழகம் என்ற பெயரில் ஓா் அமைப்பை நடத்தி வரும் இவா், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருபவா். கடந்த 15 நாட்களாக தொகுதி முழுவதும் விறுவிறுப்பாக பிரசாரம் செய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் நகரில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாக செல்லிடப்பேசி வழியே தெரியவந்தது. இதையடுத்து, பிரசாரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு பிரசார வாகனத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு மநீம வேட்பாளா் சா. மூா்த்தி ரத்த தானம் அளித்தாா். சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு அவா் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கினாா்.