முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மண்ஏற்றிய லாரி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

கறம்பக்குடி அருகிலுள்ள மழையூா் பகுதியில் வட்டாட்சியா் விசுவநாதன் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியா் விசுவநாதன், அதை மழையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். தொடா்ந்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →