தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த ஜெ.ஜெ.நகரின் பின்புறமுள்ள தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த ஜெ.ஜெ.நகரின் பின்புறமுள்ள தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா இந்த கண்மாயிலில் நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் இப்பகுதியில் நல்ல மழை பெய்திருந்ததால், கண்மாயில் நீா் நிறைந்து காணப்பட்டது.
Advertisement
இதைத் தொடா்ந்து நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூா், அஞ்சுபுளிபட்டி, பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலை, கூடையுடன் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். சிலேபி, கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வகைகள் பொதுமக்கள் வீசிய வலையில் பிடிபட்டன.