ஆலங்குடியில் மாணவா் பயிலரங்கம்
ஆலங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாநில அளவிலான மாணவா் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாநில அளவிலான மாணவா் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்குக்கு, மாநில அரங்க உறுப்பினா் கண்ணன் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் பயிலரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.
4 நாள்கள் நடைபெறும் பயிலரங்கில் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்று பேச உள்ளனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலரங்கில் பங்கேற்றுள்ளனா்.