முகப்பு
புதுக்கோட்டை

திருமயம் ஒன்றியத்தில் நலத்திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியப் பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியப் பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

வி. லட்சுமிபுரம் ஊராட்சியில் ரூ. 26.70 லட்சத்தில் நல்லிப்பட்டி செல்லும் சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து, அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

விராச்சிலையில் ரூ. 11 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கும், வீரனாம்பட்டியில் ரூ. 9.98 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கும் பூமிபூஜை போடப்பட்டது.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 9 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் பிரேம்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அழகு சிதம்பரம், சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜன், குமரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.