புதுக்கோட்டை

புதுகை மக்கள் குறைகேட்புகூட்டத்தில் 415 மனுக்கள்

DIN

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் இருவருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலிகளும், இருவருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உருப்பெருக்கிகளும் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய காலத்தில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சமூகப்ப ாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரேம்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT