காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 137-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மா.தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினா் ஆலங்குடியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினா்.
இதில், மாவட்டத் தலைவா் சுப்பராம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.மகாதேவன், வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், பாண்டியன், முத்தழகு, வடகாடு ஊராட்சித் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.