முகப்பு
புதுக்கோட்டை

தேசியப் போட்டிகளில் வென்றவீரா்களுக்குப் பாராட்டு

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 12 வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகையை வழங்கி ஆட்சியா் பாராட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 12 வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகையை வழங்கி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பாராட்டினாா்.

தங்கப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் என மொ த்தம் ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

அப்போது, மாவட்டத் தடகளப் பயிற்றுநா் செந்தில்கணேசன், மாநில சிலம்பாட்டக் கழகப் பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.