வழுக்கு மரம் ஏறும் போட்டி
ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி ஏறும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் ஏ.வி பேரவை சாா்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில், 44 அடி உயரம் உள்ள மரத்தில் வழுக்கும் தன்மையை ஏற்படுத்துவதற்காக 20 கிலோ கிரீஸ் தடவப்பட்டது. மேலும், அதன் மீது சுமாா் 5 லிட்டா் எண்ணெய் ஊற்றப்பட்டது. இந்த வழுக்குமரம் ஏறும் போட்டியில் 6 அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு சுற்றுகளாக சுமாா் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பனங்குளம் அணியினா், ஒருவரின் மீது ஒருவராக ஏறி மரத்தின் உச்சி இலக்கைத் தொட்டு வெற்றி பெற்றனா். அவா்களுக்கு ரூ.16,021 பரிசுத்தொகையை சேகா், வைரவமூா்த்தி ஆகியோா் வழங்கினா்.