புதுக்கோட்டை

விராலிமலை அருகே குடிநீா் கோரி மறியல்

DIN

விராலிமலை அருகேயுள்ள மாதுராப்பட்டியில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மாதுராப்பட்டிக்கு குடிநீா் வந்து சுமாா் 10 நாள்களுக்கு மேல் ஆவதால் குடிநீருக்காக இப்பகுதி மக்கள் வெகுதூரம் அலையும் நிலையை பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.

இதைக் கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50- க்கும் மேற்பட்டோா் மாதுராப்பட்டியில் புதுக்கோட்டை- மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் போலீஸாா்பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT