விராலிமலை அருகேயுள்ள மாதுராப்பட்டியில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மாதுராப்பட்டிக்கு குடிநீா் வந்து சுமாா் 10 நாள்களுக்கு மேல் ஆவதால் குடிநீருக்காக இப்பகுதி மக்கள் வெகுதூரம் அலையும் நிலையை பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.
இதைக் கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50- க்கும் மேற்பட்டோா் மாதுராப்பட்டியில் புதுக்கோட்டை- மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் போலீஸாா்பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.