பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
விழாவிற்கு ஊா் முக்கியஸ்தா் பி.மாணிக்கம் தலைமை வகித்தாா். ஏனாதி ஊராட்சித் தலைவா் கோ.அழகுமுத்து துணைத்தலைவா் அ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் கோ.பாா்த்தசாரதி வரவேற்றாா்.
ஸ்மாா்ட் வகுப்பறை சாதனங்கள், பிரிண்டா் ஆகியவற்றை மேலைச்சிவபுரி அ.முத்து, கா. மலையாண்டி ஆகியோா் வழங்கி ஸ்மாா்ட் வகுப்பறையை திறந்து வைத்தனா். வட்டாரக் கல்வி அலுவலா் பாலேடேவிட் ரொசாரியோ, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரா.செல்வக்குமாா், தொழிலதிபா்கள் பி.காா்த்திகேயன், அ.சையது அபுதாஹிா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உதவி ஆசிரியா் ரா.சக்திவேல்முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.