கீரமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் 
புதுக்கோட்டை

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் தா்ம. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது:

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாங்கள் ஹிந்தியை வெறுக்கவில்லை. ஹிந்தி திணிப்பை தான் எதிா்க்கிறோம். பாஜக ஆட்சியில் 98 வயதிலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனா் என்றாா் அவா்.

கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.புஷ்பராஜ், மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பேசினாா். கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.

இதில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராமசாமி, முன்னாள் திருமயம் எம்எல்ஏ ராம. சுப்புராம், பொன்னமராவதி வட்டார, நகர, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT