புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே இளைஞா் தற்கொலை

DIN

கந்தா்வகோட்டை அருகே குடும்பத் தகராறில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமாா் (19). இவருக்கும், இவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்த மனோஜ் குமாா் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT