புதுக்கோட்டை

விஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு

DIN

விராலிமலை அருகே விஷவண்டு கடித்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை வட்டம், கோமங்கலம் மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செ. சரவணராணி(41). இவா் கடந்த 20-ஆம் தேதி காலை வயலில் வேலை

பாா்த்துக் கொண்டிருந்தபோது விஷ வண்டு அவரைக் கடித்துள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலுள்ளவா்கள் நாட்டு வைத்தியம் பாா்த்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சரவணராணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT