முகப்பு
புதுக்கோட்டை

கல்பனா சாவ்லா விருது பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வீர, தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வீர, தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. தகுதிவாய்ந்த பெண்கள் கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக ஆக. 5 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இறுதி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328- 296209, 04328-224122 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.