விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது
விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.
விராலிமலை அருகே ஆடுகளைத் திருட முயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.
விராலிமலை அருகிலுள்ள மேலபச்சகுடி வயல் வெளியில் புற்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், ஆடுகளின் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு கடத்த முயன்றனா்.
அப்போது அவ்வழியாகச் சென்ற ஊா்க்காரா் ஒருவா், இதை பாா்த்தவுடன் சப்தமிட்டாா். தொடா்ந்து ஊா் மக்கள் திரண்டு வந்து ஆடு திருட முயன்றவா்களைப் பிடித்து, விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து காவல்துறையினா் நடத்திய விசாரணையில், அவா்கள் திருச்சி மாவட்டம், மணிகண்டம் சத்யா, ரதீஷ்குமாா் மற்றும் நாகமங்கலம் செல்வகுமாா் எனத் தெரியவந்து. இதையடுத்து மூவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.