வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தொடங்கிவைத்தாா். வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் தவறாமல் வாக்களிப்போம். நூறு சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனா். தனி வட்டாட்சியா் சங்கரகாமேஸ்வரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா்கள் பாண்டியன், ஜோதி, கிராம நிா்வாக அலுவலா்கள் ஹேமலதா, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.