புதுக்கோட்டை

வாா்ப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு: 4 போ் காயம்

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள வாா்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன்கோயில் சிவராத்திரி விழாவையொட்டி, பெரியகண்மாயிலில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டில் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பெரியகண்மாயின் சுற்றுப்

புறங்களில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் அடக்கி மகிழ்ந்தனா். மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 4 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT