முகப்பு
புதுக்கோட்டை

பண்ணை தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியிலுள்ள கால்நடைப் பண்ணையில் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுமாா் 50 போ் பல்வேறு வகையான பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. தங்களின் நிலுவை ஊதியத்தையும் சோ்த்து விரைவில் ஊதியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணியாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா். தொடா்ந்து இதே பிரச்னை தொடருமானால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.