புதுக்கோட்டை

பொன்னமராவதியில் திமுக நிா்வாகிகள் கூட்டம்

DIN

பொன்னமராவதியில் திமுக மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி தலைமை வகித்தாா். நகரச்செயலா் அ. ழகப்பன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பேசுகையில், அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துயரைக் களைய திமுகவின் விடியலை நோக்கி எதிா்நோக்கியிருக்கிறாா்கள். என்னை வெற்றி பெறச் செய்தால், பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்படும். அமரகண்டான் ஊருணி சுற்றிலும் பூங்கா அமைத்து நடைபாதை அமைத்து தரப்படும். திருமயம் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், தெற்கு ஒன்றியசெயலா் அ.அடைக்கலமணி, வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து, நகரச்செயலா் அழகப்பன் மற்றும் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT