திருமயம் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு
பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி ஒன்றியத்தில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி, நெய்வேலி, அரசமலை, வையாபுரி,
தேனூா், சாத்தனூா், வெள்ளகுடி, காரையூா், கரையாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து வாக்குகள் சேகரித்துப் பேசியது: திருமயம் தொகுதி மக்களின் நூற்றாண்டு கனவான காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தற்போது முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2025இல் இப்பகுதி செழித்து வளமாகக் காணப்படும். நம்முடைய பகுதிக்கே காவிரியைக் கொண்டுவந்துள்ளோம் என்றாா்.
Advertisement
ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன், காசிகண்ணப்பன், சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.