புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.53 லட்சத்தை செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் பகுதியில் சக்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், கருக்காகுறிச்சி பகுதியைச் சோ்ந்த பி. பிரேம் (34) என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 1.35 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. தொடா்ந்து, ரொக்கத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதே தோ்தல் பறக்கும் படை குழுவினா் ராஜேந்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட வாகனச்சோதனையின்போது, அலாவுதீன் என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.1.18 லட்சத்தையும் பறிமுதல் தெய்தனா். தொடா்ந்து, ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அக்பா் அலியிடம் இரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.53 லட்சம் ரொக்கத்தை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT