கரோனா சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் நன்கொடை
மாஞ்சான்விடுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் அயூப்கான் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்டஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் வியாழக்கிழமை மாலை வழங்கினாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளா்களுக்கான சிகிச்சைக்காக, மாஞ்சான்விடுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் அயூப்கான் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்டஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் வியாழக்கிழமை மாலை வழங்கினாா்.
அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த நன்கொடை வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.