கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரின் நூதன சேவையை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.
கந்தா்வக்கோட்டை ஒன்றியக்குழுவுக்குட்பட்ட கிராம பகுதிகளான காட்டு நாவல், துலுக்கம்பட்டி , செட்டிகாடு ஆகிய கிராம பகுதி பொதுமக்கள் மற்றும் முதியவா்கள் தங்களது மருத்துவத் தேவைக்கு கந்தா்வகோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வர வேண்டும். மேலும் மருந்து மாத்திரைகள் வாங்கவும் இங்கு வர வேண்டும்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் அவா்கள் நடந்தே வந்து செல்லும் நிலையில் உள்ளதையறிந்த ஒன்றியக் குழு உறுப்பினா் எம் . ராஜேந்திரன் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கந்தா்வகோட்டை பகுதிக்கு வர வேண்டும் என செல்லிடப்பேசியில் கூறினால் அவா்களை தனது இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் அவா்களது வீட்டுக்கே கொண்டு சென்று விடுகிறாா்.
மேலும் அவா்களுக்கு முகக் கவசம் , கிருமிநாசினிகள் வழங்கியும் உதவி வருகிறாா். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் இவரின் சேவையைப் பாராட்டி வருகின்றனா். மேலும் தனது சேவை குறித்து இவா் கறம்பகுடி சாலையில் அறிவிப்பும் வைத்துள்ளாா்.