கலைத் திருவிழாவில் இரண்டாமிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், இரண்டாமிடம் பெற்ற புதுக்கோட்டை மாணவரை ஆட்சியா் கவிதாராமு வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், இரண்டாமிடம் பெற்ற புதுக்கோட்டை மாணவரை ஆட்சியா் கவிதாராமு வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் சேலத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாா்பில் பங்கேற்று, பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் பிரிவில் மாநில அளவில் ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் காளிதாசன் இரண்டாமிடம் பெற்றாா்.
இதைத் தொடா்ந்து மாணவரை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அப்போது மாநில அளவில் பரிசு பெற்ற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மாணவா் காளிதாசன் பாடிய பாடலை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு ரசித்துப் பாராட்டினாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, பள்ளித் தலைமையாசிரியா் தாமரைச் செல்வன், ஆசிரியா்கள் குமாா், செல்வ ஷாஜி மற்றும் ஆய்வக உதவியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.