தஞ்சை, புதுகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடா் மழை காரணமாக, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக பல இடங்களிலும் பகலில் விட்டுவிட்டு மழை பெய்தது.
மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், புதுகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 26) அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
இதேபோல், தஞ்சாவூா் மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.