அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளுவா் திருநாள் விழாவின்போது வழங்கப்படவுள்ள அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளுவா் திருநாள் விழாவின்போது வழங்கப்படவுள்ள அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதாராமு தெரிவித்திருப்பது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ஆகியோா்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கும், வாழ்க்கைத் தரம் உயரவும் பாடுபட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு, நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.