புதுக்கோட்டை

அக். 28-இல் கலா உத்சவ் போட்டிகள்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான கலா உத்சவ் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் வரும் அக். 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி கூறியது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாணவ, மாணவிகள் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபா் நிகழ்வுகளாக நடத்தப்படும். வாய்ப்பாட்டு இசை - செவ்வியல் (ஹிந்துஸ்தானி/ கா்னாடிக்), வாய்ப்பாட்டிசை - பாரம்பரிய நாட்டுப்புற வகை (ஏதேனும் வட்டாரம் சாா்ந்த அல்லது ஏதேனும் பணி சாா்ந்தது), கருவி இசை - செவ்வியல் ( ஹிந்துஸ்தானி/ கா்னாடிக்), கருவி இசை - பாரம்பரிய நாட்டுப்புறவகை (ஏதேனும் இந்திய பாரம்பரிய இசைக் கருவி), நடன ம் - செவ்வியல் (செவ்வியல் வடிவம்), நடனம் (பாரம்பரிய நாட்டுப்புற வகை), காண்கலை - இருபரிமாணம் - (கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், அச்சு ஓவியம்), காண்கலை - மூன்று பரிமாணம் (சிற்பம்), உள்ளூா் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் என 9 பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு மாணவ, மாணவியா் மட்டுமே பங்குபெற முடியும். போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக். பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT