முகப்பு
புதுக்கோட்டை

பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்போம்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலையில் இருப்போம் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு அறிவுரை வழங்கியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா்நிலையில் இருப்போம் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு அறிவுரை வழங்கியுள்ளாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்கான அனைத்துத் துறையினரின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பேசியது:

தண்ணீா் தேங்கும் இடங்கள் எனக் கருதப்படும் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களை பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான மருந்துகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். மரங்கள் சாலைகளில் விழுந்தால் அவ்வப்போது அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.

நீா்நிலைகளில் கரைகள் போதுமான பலத்துடன் இருக்கிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வட்டாட்சியா்கள் தினமும் காலை 7 மணிக்கு ஆட்சியரகத்தில் உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அபிநயா, எம்.எஸ். தண்டாயுதபாணி, சொா்ணராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.