உதவி மின் பொறியாளா்கள் பணியிடை நீக்கம்
பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாக உதவி மின் பொறியாளா்கள் இருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாக உதவி மின் பொறியாளா்கள் இருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது மின்சாரம் தாக்கி ஜெய்சங்கா் என்ற மின் ஊழியா் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக பணியில் இருந்ததாக உதவி மின் செயற் பொறியாளா்கள் ரகுநாதன் மற்றும் ஜெகநாதன் ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை மின்சார மேற்பாா்வை பொறியாளா் சேகா் பணி வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.