புதுக்கோட்டை நாா்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் தோ்த் திருவிழாவையொட்டி வரும் ஏப். 11ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
அன்றைய நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை என்றபோதும், அத்தியாவசியத் தேவை கருதி, மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த பணிகளுடன் செயல்படும். இந்த விடுமுறைக்கான மாற்றுப் பணி நாளாக வரும் ஏப். 23ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும், வழக்கமாக சனிக்கிழமையை வேலைநாளாகக் கொண்டுள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாள் ஏப். 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.