புதுக்கோட்டை

மதுக்கடை இடமாற்றத்துக்கு எதிா்ப்பு: மக்கள் சாலை மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மதுக்கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி காமராஜா் சிலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடையை அதே பகுதியில் உள்ள வேறொரு கட்டடத்திற்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் வழியில் மதுக்கடையைத் திறக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் வடிவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் தலைமையில் சமாதானக்கூட்டம் மூலம் தீா்வு காணலாம் என போலீஸாா் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து, வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் செந்தில்நாயகி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT