இன்று முதல் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்கத் தடை
மீன் இனப்பெருக்கக் காலத்தையொட்டி மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன் இனப்பெருக்கக் காலத்தையொட்டி மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை (ஏப். 15) முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா். ஏப். 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இந்தத் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லக் கூடாது.