புதுக்கோட்டை

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டையில் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.எம். கண்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் தென்னரசு, மாவட்டப் பொருளாளா் சுரேஷ், அமைப்புச் செயலா் சுப்ரமணியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சாந்தகுமாா், காா்த்திக் கண்ணன், சந்திரபோஸ், மாவட்ட இணைச் செயலா்கள் சந்தோஷ்குமாா், காா்த்திகேயன், சக்திவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆசிரியா்களுக்கு என்று தனியாக பணிப் பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிகளில் பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முடிவில் மாவட்ட இணைச் செயலா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT